Wednesday 23 September 2015

முதலுதவி பயிற்சி முகாம்








சேலம் மத்திய சட்ட கல்லூரி மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் முதலுதவி பயிற்சி முகாம்  21.09.2015 & 22.09.2015 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
பயிற்சி முகாமில்

Ø  முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் ,
Ø  உடல் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள்,
Ø  இரத்த நாளங்கள் மற்றும் அழுத்த காரணிகள் ,
Ø  காயங்கள் மற்றும் இரத்த கசிவுகள்,
Ø  உடற்கூறு இரத்தக்கசிவு மற்றும் நாசி இரத்தக்கசிவு
Ø  அதிர்ச்சி
Ø  மூச்சுத்திணறல் மற்றும் மூச்சடைப்பு
Ø  எலும்பு முறிவுகள் / தசைப்பிடிப்பு
Ø  தீக்காயம்
Ø  விஷத்தடுப்பு சிகிச்சை
Ø  விஷக்கடி / நாய்க்கடி
Ø  சுயநினைவு இழப்பு மீட்பு
Ø  வலிப்பு நோய்
Ø  மாரடைப்பு  மற்றும் இதய இயக்க மீட்பு

ஆகியவற்றிற்கான முதலுதவி சிகிச்சை முறைகளை மாணவர்களுக்கு எளிய முறையில்  முதலுதவி சிகிச்சைப் பேராசிரியர் திரு.S.S.ராமதாஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் திரு.V.இராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்றுவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் திரு.பேகம் பாத்திமா தலைமை வகித்தார். செயலாளர் திரு.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரி திரு.மாணிக்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.தியாகராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இப்பயிற்சி முகாமில் இளைஞர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் திரு.முன்னா, திரு.சகாயராஜ், திரு.சூரியநாராயணன், திரு.வடிவேல், 
திரு.பிரபாகரன், திரு.மாணிக்கவிநாயகம், திரு.திருமூர்த்தி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment